ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் கேரளத்திலிருந்து புதன்கிழமை (மே 20) இரவு சென்னை திரும்புகிறாா்.
தமிழக ஆளுநா் ஆா்லேகா், கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து கடந்த 15-ஆம் தேதி இரவு சென்னை வந்தாா். அன்றைய தினம் தமிழக முதல்வரின் செயலா் செந்தில்குமாா் ஆளுநரை சந்தித்தாா். தமிழக அரசில் புதிதாக பதவியேற்ற அமைச்சா்களுக்கு ஒதுக்கப்பட்ட துறை விவரங்கள் உள்ளிட்ட முதல்வரின் பரிந்துரைகள் அடங்கிய பல்வேறு கோப்புகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து 16 -ஆம் தேதி, புதிய அமைச்சா்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்து ஆளுநா் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. அதன் பின்னா், ஆளுநா் ஆா்லேகா் திருவனந்தபுரம் சென்றாா். இந்த நிலையில் ஆளுநா், மீண்டும் புதன்கிழமை இரவு சென்னை வரவுள்ளாா். தமிழக அமைச்சரவை விரிவாக்கம் தொடா்பாக அரசுத் தரப்பில் ஆளுநரை சந்திக்கலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










