தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளை ஒரு புதிர் என மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து செய்தியாளருடன் வைகோ பேசியதாவது, "கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர். ஏனெனில், 4 அமைப்புகள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் திமுக வெற்றி பெறும் என ஆதரவளித்துள்ளன. வேறு 2 அமைப்புகள் அதிமுகதான் ஆட்சியமைக்கும் என ஆதரவளித்துள்ளன.
ஒரு குறிப்பிட்ட கருத்துக் கணிப்பு அமைப்பில், விஜய் தலைமையிலான தவெக பெரும்பான்மையைப் பெறும் என்று தெரிவித்துள்ளனர்.
ஆகையால், இந்தப் புதிரைக் காத்திருந்து பார்ப்போம். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அனைவரும் ஆவலாக உள்ளனர். முடிவுகளில் ஆச்சரியங்கள் இருக்கலாம். இல்லாமலும் போகலாம்" என்று தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதியில் நடந்து முடிந்த நிலையில், வருகிற திங்கள்கிழமையில் (மே 4) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
Summary
Everybody is very anxious about the results of the Tamil Nadu Assembly elections, says MDMK Leader Vaiko
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வணிக சிலிண்டர் விலை உயர்வு: வைகோ கண்டனம்

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி? கருத்துக் கணிப்பு முடிவுகள்!
திமுக வெற்றியும் தலைகீழாக மாறிய அதிமுகவும்: வைகோ
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


