தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதல்வர் விஜய்யைச் சந்திக்கவுள்ளது பற்றி...

News image

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் முதல்வர் விஜய். - ANI

Updated On :17 ஜூன் 2026, 11:42 am IST

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (ஜூன் 17) பிற்பகல் 3 மணிக்கு முதல்வர் விஜய்யைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று சில கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்துள்ளது.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக, 4 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றது.

தவெகவுக்கு திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகள் ஆதரவளித்த நிலையில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் தவெகவுக்கு ஆதரவளிக்க முடியாமல் போனது.

இதையடுத்து முதல்வரான பிறகு விஜய், மரியாதை நிமித்தமாக வைகோவைச் சந்தித்து வாழ்த்துபெற்றார்.

தொடர்ந்து வைகோவும் அவரது மகனும் எம்.பி.யுமான துரை வைகோவும் தவெகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று பிற்பகல் 3 மணிக்கு முதல்வர் விஜய்யைச் சந்தித்துப் பேசவுள்ளார். நேற்று வைகோ, ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

MDMK chief vaiko meets CM vijay today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.