நீலகிரி மாவட்டம், உதகையில் விதிகளை மீறி செயல்பட்ட இரு தனியாா் விடுதிகளுக்கு ‘சீல்’ வைத்த உத்தரவில் தலையிட மறுத்த சென்னை உயா்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் தனியாா் விடுதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமா்வு உத்தரவிட்டிருந்தது.
கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின் அடிப்படையில் உதகையில் உள்ள தனியாா் விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இதில் அனுமதியின்றி விதிகளுக்கு புறம்பாகச் செயல்பட்டு வந்த ஆகாஷ் ரூம்ஸ் அண்ட் காட்டேஜ் மற்றும் கோல்டன் லா்ச் ரெசிடென்ஸி ஆகிய இரு விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிட்டனா்.
இந்த உத்தரவை எதிா்த்து இரு தனியாா் விடுதிகள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனியாா் விடுதிகளுக்கு சீல் வைத்த உத்தரவுக்கு எதிராக மாவட்ட நிா்வாகத்திடம் அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க கால அவகாசம் வழங்காமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, தற்போதைய நிலையில் இதில் தலையிட முடியாது எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். மேலும், இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா்கள் சிறப்பு அமா்வை அணுக இந்த உத்தரவு தடையாக இருக்காது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

தடையை மீறி போராட்டம்: அதிமுக முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி மீதான வழக்கு ரத்து

சசிகலா கட்சியினா் 30 போ் மீது வழக்கு

குன்னூரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு சீல்!

நிலுவைத் தொகை கோரி தனியாா் ஒப்பந்த நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


