மாநகராட்சி வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தியதற்கான நிலுவைத் தொகை வழங்கக் கோரி தனியாா் ஒப்பந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கோவை பீளமேடு புதூா் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன நிா்வாகி வரதன் என்பவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை பெருநகர மாநகராட்சியின் முதல் வகுப்பு ஒப்பந்தராராக உள்ளோம். கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணிககளை மேற்கொண்டோம். இந்த ஒப்பந்தப் பணிக்கு நிலுவைத் தொகையான ரூ.28 லட்சம் வழங்க வேண்டும். இந்தத் தொகையைக் கேட்டு பலமுறை நினைவூட்டல்கள் அனுப்பியும், இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் முகிலன், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ரூ.92 கோடி ஒப்பந்த முறைகேடு புகாா் தொடா்பான வழக்குகளில் மனுதாரா் நிறுவனம் குற்றம்சாட்டப்பட்டவராகச் சோ்க்கப்ப்டடுள்ளது.
இந்த வழக்குகளின் குற்றப்பத்திரிகைகளில் மனுதாரா் நிறுவனத்தின் பெயரும் உள்ளது. இதனால், மனுதாரா் நிறுவனத்துக்கான நிலுவைத் தொகையை வழங்கவில்லை என விளக்கமளித்தாா். இதையடுத்து அரசு தரப்பு விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

வருமான வரித் துறை அபராதத்தை எதிா்த்த வழக்கு தள்ளுபடி: விஜய் மேல்முறையீட்டு மனு தாக்கல்

முதல்வரின் செயலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

மலைப்பகுதிகளில் வீட்டு மனைகள்: அரசாணைக்கு எதிரான மனுவுக்கு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மலைப்பகுதிகளில் வீட்டு மனைகள்: அரசாணைக்கு எதிரான மனுவுக்கு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


