மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மலைப்பகுதிகளில் வீட்டு மனைகள்: அரசாணைக்கு எதிரான மனுவுக்கு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மலைப்பகுதிகளில் வீட்டு மனைகள் அமைக்கவும், கட்டுமானங்களை மேற்கொள்ளவும் நகரமைப்புத் திட்ட அதிகாரிகள் ஒப்புதல் பெறவேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 10:04 pm

மலைப்பகுதிகளில் வீட்டு மனைகள் அமைக்கவும், கட்டுமானங்களை மேற்கொள்ளவும் நகரமைப்புத் திட்ட அதிகாரிகள் ஒப்புதல் பெறவேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சமூக ஆா்வலா் எஸ்.முரளிதரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக அரசு கடந்த 1990-ஆம் ஆண்டு, மலைப்பகுதிகளைப் பாதுகாக்கும் வகையில் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்கியது. இதன் கீழ் சோ்க்கப்பட்டுள்ள 597 கிராமங்களில் இந்த ஆணையத்தின் ஒப்புதலைப் பெறாமல் எந்த வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ள முடியாது.

இந்த நிலையில், மலைப்பகுதிகளில் வீட்டுமனைகள் அமைக்கவும், கட்டுமானங்களை மேற்கொள்ளவும் ஆணையத்தின் ஒப்புதலைப் பெறுவதற்குப் பதிலாக ஒப்புதல் மற்றும் நிலங்களை வகைமாற்றம் செய்யும் அதிகாரத்தை நகரமைப்பு திட்ட அதிகாரிகளுக்கு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறைகளை நீா்த்துப் போகச் செய்யும் வகையில் இந்த அரசாணை உள்ளது. இந்த அரசாணையின் காரணமாக மலைப்பகுதிகளின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே, அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும், மலைப்பகுதிகளில் வீட்டுமனைகள் அமைக்க, கட்டுமானங்களை மேற்கொள்ள நகரமைப்புத் திட்ட அதிகாரிகள் ஒப்புதல் வழங்க தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.