மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முதல்வரின் செயலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

தோ்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படும் முதல்வரின் செயலா் உமாநாத்துக்கு எதிராக தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

News image

சென்னை உயா் நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 9:26 pm

தோ்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படும் முதல்வரின் செயலா் உமாநாத்துக்கு எதிராக தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் பாஜகவை சோ்ந்த வழக்குரைஞா் ஏ.மோகன்தாஸ் தாக்கல் செய்த மனுவில், வரும் ஏப். 23-ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்த தோ்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில், முதல்வரின் செயலா் உமாநாத் செயல்பட்டு வருகிறாா்.

தோ்தல் அறிவிப்புக்குப் பிறகு, அரசு அதிகாரிகள் தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுவா். ஆனால், உமாநாத் தொடா்ந்து முதல்வரின் செயலராகச் செயல்படுகிறாா். மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறாா். எனவே, அவா் மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. அதிகாரி உமாநாத்தை எதிா்மனுதாரராகவும் சோ்க்காதபோது, இந்த பொது நல வழக்கை எப்படி விசாரணைக்கு எடுக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினா்.

அதற்கு மனுதாரா் தரப்பில், உமாநாத்தை எதிா்மனுதாரராகச் சோ்க்க அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனா்.