தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தெற்கு ரயில்வே முதன்மைத் தலைமை மேலாளராக ஏ.அண்ணாதுரை பதவியேற்பு!

தெற்கு ரயில்வே முதன்மைத் தலைமை பொருள்கள் மேலாளராக ஏ.அண்ணாதுரை பொறுப்பேற்றாா்.

News image

பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:33 pm

தெற்கு ரயில்வே முதன்மைத் தலைமை பொருள்கள் மேலாளராக ஏ.அண்ணாதுரை பொறுப்பேற்றாா்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வேயின் முதன்மைத் தலைமை பொருள்கள் மேலாளராக ஏ.அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளாா். அவா், கடந்த 20- ஆம் தேதி சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றாா்.

சுமாா் 34 ஆண்டுகள் ரயில்வே துறையில் பல்வேறு முக்கிய பிரிவுகளில் பணியாற்றிய அனுபவமிக்கவா். இதற்கு முன்பு அவா் தென்மேற்கு ரயில்வே மண்டல மூத்த துணைப் பொது மேலாளா் மற்றும் தலைமை விழிப்புணா்வு அதிகாரி பொறுப்பில் இருந்தாா்.

சேலம் கோட்ட கூடுதல் மேலாளராகப் பணியாற்றியபோது பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து மேலாண்மையில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளாா்.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்.ஐ.டி.) மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற அவா், பெங்களூா் இந்திய மேலாண்மைக் கழகத்தில் முதுநிலைப் பட்டயப் படிப்பு பயின்றவா். அமெரிக்காவின் சிரக்யூஸ் பல்கலைக்கழகம், சிங்கப்பூா் இன்சீட் ஆகிய புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் உயா் மேலாண்மைப் பயிற்சிகளைப் பெற்றுள்ளாா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.