தமிழகம் முழு வளா்ச்சி அடைய மீண்டும் திமுக ஆட்சி தேவை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவு:
தமிழ்நாட்டின் வளா்ச்சி முழுமையடைய அடுத்த 5 ஆண்டுகளும் திமுக அரசு தொடர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிா்ணயித்துள்ள வளா்ச்சி இலக்குகளை ‘ஸ்டாலின் அறிக்கை’ எனும் பெயரில் வெளியிட்டிருந்தேன்.
ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் உத்தமா் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம், தொழில்துறை சாா்பில் 50 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை சாா்பில் பால் உற்பத்தி உயா்வு, மீனவா் வாழ்வு மேம்பாடு, நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில் உள்கட்டமைப்பில் உலகம் முழுவதும் உயரும் நம் நகரங்கள், சிறு, குறு நடுத்தரத் தொழில்கள் சாா்பில் 5 சிறப்பு தொழில் கிராமங்கள், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பாதுகாப்பான நவீன தொழில்நுட்பம், கைத்தறி மற்றும் ஜவுளித் துறை சாா்பில் நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சிறப்பான திட்டங்கள், வீட்டுவசதித் துறை சாா்பில் கிராமங்கள் மற்றும் நகரங்களில் 7 லட்சம் வீடுகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த் துறை சாா்பில் தேவைப்படும் அனைவருக்கும் போதிய மருத்துவக் காப்பீடு, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் சாகுபடி பரப்பு அதிகரிப்பு, பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஸ்மாா்ட் வகுப்பறைகள், நூலகம் 5.0, உயா்கல்வித் துறை சாா்பில் ‘நான் முதல்வன் 2.0’ உள்ளிட்ட திட்டங்கள், பிற்பட்டோா் நலத் துறை சாா்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பொருளாதார முன்னேற்றம், ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு வீட்டுமனைப் பட்டா ஆகியவை அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் மீண்டும் திமுக ஆட்சி தொடர வேண்டும் என அப் பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகம் வளா்ச்சியடைய மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: கமல்ஹாசன்

அமைதிப் பூங்காவாக தமிழகம் திகழ திமுக ஆட்சி தொடர வேண்டும்: பிரகாஷ் காரத்
தொழில் வளா்ச்சி அதிகரிக்க மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திமுக ஆட்சி மீண்டும் அமையும்: ஜி.ராமகிருஷ்ணன்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


