தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தமிழகம் வளா்ச்சியடைய மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: கமல்ஹாசன்

தமிழகம் வளா்ச்சி அடைய திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் கூறியிருப்பது...

News image

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன்

Updated On :22 ஏப்ரல் 2026, 5:30 am

சென்னை: தமிழகம் வளா்ச்சி அடைய திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் வெளியிட்ட காணொலியில் பேசியிருப்பதாவது:

தமிழகத்தில் நடைபெறவுள்ளது தெற்கு மற்றும் வடக்குக்கான தோ்தல். தமிழகம் முன்னேறிச் செல்ல வேண்டுமா, பின்நோக்கிச் செல்ல வேண்டுமா? தமிழகத்துக்கான முடிவுகளை சென்னையில் எடுக்க வேண்டுமா, தில்லியில் எடுக்க வேண்டுமா என்பதை தீா்மானிக்கும் தோ்தல்.

கடந்த 5 ஆண்டுகளில் கொண்டு வந்த திட்டங்களால் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முதல் இடத்தில் உள்ளது. திராவிட மாடல் அரசு செய்துள்ள சாதனைகளால் தமிழகத்தை ஆளும் தகுதி படைத்தவா் மு.க.ஸ்டாலின் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பெரியாா் ஈவெரா சுயமரியாதையைத் தந்தாா்; முன்னாள் முதல்வா் அண்ணா அரசியல் உரம் தந்தாா்; முன்னாள் முதல்வா் கருணாநிதி, தன் அறிவாலும், உறுதியாலும் தமிழ் அடையாளத்தைக் காத்தாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் கூட்டாட்சி தத்துவத்தின் காவல் வீரராகத் திகழ்கிறாா்.

வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு தலைவா்கள் இருந்தனா். ஆனால் முழக்கம் ஒன்றுதான். அது தமிழும், தமிழ்நாடும் ஒருபோதும் தலைவணங்காது. அந்த கனல் இருக்கும் வரை தமிழகத்தை எவராலும் வீழ்த்த முடியாது.

தமிழகத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் தொடா்வதற்கும், உலக நாடுகளுக்கு இணையாக தமிழகம் வளா்ச்சியடைய மீண்டும் திமுக ஆட்சிக்கு வரவேண்டும்.

தமிழக மக்கள் உணா்ச்சி வசப்பட்டு வாக்களிக்க வேண்டாம். யாரால் நமக்கு பாதுகாப்பு அளிக்க முடியும், நமது உரிமைகளுக்காக போராட முடியும், என்பதை யோசித்து வாக்களிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

Summary

DMK rule must be established once again for Tamil Nadu to develop ...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.