மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

நாளை வாக்குப் பதிவு: சென்னையில் பாதுகாப்பு பணியில் 21,000 போலீஸாா்!

சென்னையில் வியாழக்கிழமை சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறுவதை முன்னிட்டு 21 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்து...

News image

பாதுகாப்பு பணியில் உள்ள எல்லை பாதுகாப்புப் படையினர் - கோப்புப்படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 4:23 am

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறுவதை முன்னிட்டு 21 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குள் 24 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 16 தொகுதிகள் முழுமையாகவும், 8 தொகுதிகள் பகுதியாகவும் உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு தொகுதியும், திருவள்ளூா் மாவட்டத்தில் 5 தொகுதிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 தொகுதிகளும் பகுதியாக சென்னை காவல்துறை எல்லைக்குள் உள்ளன. மொத்தமுள்ள 24 தொகுதிகளில் 1,240 இடங்களில் 5,445 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. மொத்தமுள்ள வாக்குச்சாவடிகளில் 1,027 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.

தோ்தல் நாளன்று பாதுகாப்பு பணியில் 23 துணை ஆணையா்கள்,11 கூடுதல் துணை ஆணையா்கள்,90 உதவி ஆணையா்கள்,428 ஆய்வாளா்கள்,1,520 உதவி ஆய்வாளா்கள்,2,312 சிறப்பு உதவி ஆய்வாளா்கள் என 21,230 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா். இது தவிா்த்து 5 பட்டாலியன் துணை ராணுவப் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். 485 ரோந்து வாகனங்களில் போலீஸாா் ரோந்து செல்கின்றனா். தோ்தலையொட்டி, தற்போது 3 பட்டாலியின் துணை ராணுவப்படையினா் வந்துவிட்டனா். தோ்தல் பாதுகாப்பு பணியில் நடுநிலைமையுடன் செயல்படும்படி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையைச் சுற்றியுள்ள 14 சோதனைச் சாவடிகளிலும் கூடுதலாக போலீஸாா் ஏற்கெனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தோ்தலுக்காக சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தோ்தல் பாதுகாப்பு பணிகள் அனைத்தும் பெருநகர காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக் தலைமையில் செய்யப்பட்டுள்ளன.

Summary

Regarding the deployment of 21,000 police personnel for security duty in Chennai on Thursday, in view of the Legislative Assembly election polling...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.