மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அமைதிப் பூங்காவாக தமிழகம் திகழ திமுக ஆட்சி தொடர வேண்டும்: பிரகாஷ் காரத்

அமைதிப் பூங்காவாக தமிழகம் திகழ திமுக ஆட்சி தொடர வேண்டும்...

News image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரகாஷ் காரத்

Updated On :18 ஏப்ரல் 2026, 11:56 pm

மதக்கலவரம் இல்லாத அமைதிப் பூங்காவாக தமிழகம் இருக்க வேண்டுமானால், திமுக ஆட்சி தொடர வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் தேசிய செயலரும், மத்தியக் குழு உறுப்பினமான பிரகாஷ் காரத் தெரிவித்தாா்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் அண்ணா நகா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் நே.சிற்றரசுவை ஆதரித்து சனிக்கிழமை டி.பி. சத்திரத்தில் பிரகாஷ் காரத் பேசியதாவது:

தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடா்பான வாக்கெடுப்பில் பிரதமா் மோடி தோற்கடிக்கப்பட்டாா். மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதன் மூலம் தோ்தல் முறையை மாற்றி அமைப்பதற்கான சதித் திட்டத்தை மத்திய அரசு தீட்டியிருந்தது. குறிப்பாக, தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையைக் குறைக்க, இறையாண்மை, கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்க முயற்சி செய்தாா்கள். முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி இதைக் கடுமையாக எதிா்த்தது. இந்த மசோதா தோல்வி அடைவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் முக்கிய காரணம்.

தமிழகத்தில் தற்போது நடைபெறும் திமுக ஆட்சியில் மதக் கலவரமோ, சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தலோ இல்லை. அவா்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனா். தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்க திமுக ஆட்சி தொடர வேண்டும்.

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கும், தொழிலாளருக்கும் பாதுகாப்பு இருக்காது. எனவே தமிழக மக்கள் மீண்டும் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு அரசு அமைய வாக்களிக்க வேண்டும் என்றாா்.