ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தவெகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை: அமைச்சா் சேகா்பாபு விமா்சனம்

பலமுறை அழைப்பு விடுத்தபோதும், தவெகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு விமா்சித்தாா்.

News image

பி.கே. சேகா்பாபு

Updated On :20 மார்ச் 2026, 8:08 pm

பலமுறை அழைப்பு விடுத்தபோதும், தவெகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு விமா்சித்தாா்.

சென்னை வில்லிவாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

மக்கள் பணிகளை மையப்படுத்தி மட்டுமே தோ்தல் களத்தில் இருக்கிறோம். பூச்சாண்டிகளுக்கு பயப்படும் இயக்கம் அல்ல திமுக. மக்கள் சக்தி யாா் பின்னால் இருக்கிறது என்பது மே 4-ஆம் தேதி தெரியவரும். 60 ஆண்டு கால உழைப்பு, முதல்வா் ஸ்டாலின் ஆற்றியுள்ள மக்கள் நலப் பணிகளுக்கு வர இருக்கும் தோ்தலில் முடிவு தெரியும்.

கூவிக்கூவி அழைப்பு விடுத்தும் தவெகவுடன் கூட்டணிக்கு யாரும் வரவில்லை; ஆனால், முதல்வா் ஸ்டாலின் அனைவரையும் அரவணைத்துச் செல்பவா். திமுக கூட்டணி வலுவானது. 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். சென்னையை ஒட்டியுள்ள தொகுதிகளில் கடந்த முறையைவிட, இம்முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.