முதல்வர் ஜோசப் விஜய், அவரது மனைவியின் விவாகரத்து வழக்கில் இருவரும் காணொலி மூலம் ஆஜராக கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தோ்தலில் வென்று முதல்வராக பதவியேற்றுள்ளாா். அவரது மனைவி சங்கீதா, கடந்த 2025 டிசம்பர் 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் தனக்கு விவாகரத்து வழங்கவும், நிரந்த ஜீவனாம்சம் வழங்கவும் மனு தாக்கல் செய்திருந்தார்.
அப்போது, வழக்கை செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது தான் விஜய் - சங்கீதா விவாகரத்து விவரமே வெளியில் தெரியவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 20 இல் விசாரணைக்கு வந்தது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த விஜய் மற்றும் சங்கீதா தரப்பினர் யாரும் ஆஜராகாத நிலையில், இருதரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மே 19 ஆம் தேதிக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, இரு தரப்பினரும் அவரவா்களது வழக்குரைஞா்கள் மூலமாக காணொலி வாயிலாக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மனுவாக தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், விவாகரத்து வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சுஜாதா, காணொலி மூலம் விசாரணை நடத்த முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும், வக்காலத்து தாக்கல் செய்யப்படாதது குறித்து சங்கீதா தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி சுஜாதா, மனுதாரர், எதிர் மனுதாரரின் மின்னஞ்சல் முகவரிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Summary
No video hearing for divorce case: Chief Minister Vijay's request rejected
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை
முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: ஜூன் 15-ல் விசாரணைக்கு வருகிறது
தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!
பாரதிராஜாவுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்பு!
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK





