/

முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: ஜூன் 15-ல் விசாரணைக்கு வருகிறது

தமிழக முதல்வா் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு திங்கள்கிழமை (ஜூன் 15) செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

News image

விஜய் - சங்கீதா - X

Updated On :11 ஜூன் 2026, 12:46 pm IST

தமிழக முதல்வா் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு திங்கள்கிழமை (ஜூன் 15) செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தோ்தலில் வென்று முதல்வராக பதவியேற்றுள்ளாா். அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் தொடா்ந்த விவாகரத்து வழக்கு திங்கள்கிழமை (ஜூன் 15) விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ள நிலையில் முதல்வா் விஜய் நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பில்லை என அவரது தரப்பிலும், சங்கீதா நேரில் ஆஜாராக வாய்ப்பு இருப்பதாக அவரது தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பினரும் அவரவா்களது வழக்குரைஞா்கள் மூலமாக காணொலி வாயிலாக ஆஜா் ஆவா் எனத் தெரிகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.