தாம்பரம் - விழுப்புரம் இடையேயான ‘மெமு’ ரயில் வரும் ஜூன் 13, 17, 20 ஆகிய 3 நாள்கள் பகுதி ரத்து செய்யப்படும்.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி ரயில்வே கோட்டத்தில் தண்டவாளம், தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனையடுத்து குறிப்பிட்ட ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால், வரும் ஜூன் 13, 17, 20 ஆகிய தேதிகளில் சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.40 மணிக்குப் புறப்படும் மெமு ரயில் விழுப்புரம் செல்வதுக்குப் பதிலாக முண்டியம்பாக்கம் நிலையம் வரை இயக்கப்படும்.
மறு மாா்க்கத்தில் அந்த நாள்களில் விழுப்புரத்துக்குப் பதிலாக முண்டியம்பாக்கத்தில் பிற்பகல் 1.37 மணிக்குப் புறப்படும் ரயில் சென்னை கடற்கரையை வந்து சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










