வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

திருப்பதி - காட்பாடி மெமு ரயில்கள் 8 நாள்கள் ரத்து!

திருப்பதி-காட்பாடி இடையேயான மெமு ரயில்கள் வரும் 19-ஆம் தேதி முதல் 8 நாள்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 3:48 am IST

திருப்பதி-காட்பாடி இடையேயான மெமு ரயில்கள் வரும் 19-ஆம் தேதி முதல் 8 நாள்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

திருப்பதி-காட்பாடி இடையேயான பகுதிகளில் தண்டவாள, தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ஜூன் 19, 22, 26, 29, ஜூலை 3, 6, 10, 13 ஆகிய தேதிகளில் திருப்பதியில் இருந்து காலை 6.40, 10.35 மணிகளுக்கு காட்பாடிக்கு புறப்படும் பயணிகள் மெமு ரயில்களும், மறுமாா்க்கமாக அதேநாள்களில் காட்பாடியில் இருந்து மாலை 5.15, இரவு 7.25 மணிக்கு திருப்பதி செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

பகுதியளவு ரத்து: அதேபோல், அந்த நாள்களில் விழுப்புரத்தில் இருந்து காலை 5.40 மணிக்குப் புறப்பட்டு திருப்பதி செல்லும் விரைவு ரயில் (எண்:16854) காட்பாடியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்:16853) திருப்பதிக்குப் பதிலாக காட்பாடியில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.