தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆதிதிராவிடா் நலப் பள்ளி ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு

News image

கோப்புப்படம்

Updated On :4 ஜூன் 2026, 2:49 am IST

ஆதி திராவிடா் நலத் துறையில் பணியாற்றும் ஆசிரியா்கள், விடுதிக் காப்பாளா்கள் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு ஜூன் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆதிதிராவிடா் நல இயக்குநரகத்தின் இயக்குநா் கி.செந்தில்ராஜ் அனைத்து மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2026-2027) ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் இயங்கும் ஆதி திராவிடா் நல மேல்நிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள், கணினி பயிற்றுநா்கள், உடற்கல்வி இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், காப்பாளா் மற்றும் இடைநிலை ஆசிரியா் ஆகிய பதவிகளுக்கு இணையவழியில் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இந்தப் பதவிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் தங்களது விண்ணப்பங்களை கலந்தாய்வுக்கான இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆசிரியா்களை ஜூன் 8-ஆம் தேதி மாலை 6 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்துக்கு நேரில் வந்து கலந்தாய்வுக்கான இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும்.

விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் பணியாளா்கள் தெளிவாகவும், எவ்வித தவறும் இன்றி பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். இணையவழியில் பதிவு செய்வதற்கான பயனா் குறியீடு மற்றும் கடவுச் சொல் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

ஏற்கெனவே குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் (ஜூன் 8) மட்டுமே விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கு மேல் விண்ணப்பங்கள் இணையவழியில் பதிவு செய்ய இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.