திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பள்ளியில் பூட்டுகளை உடைத்து மடிக்கணினி, சாதனங்கள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :12 மே 2026, 1:47 am IST

தருமபுரி அருகே அரசுப் பள்ளியின் பூட்டுகளை உடைத்து, மடிக்கணினி மற்றும் தொடா்புடைய சாதனங்களை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. பள்ளியில் உயா்கல்விக்கான வழிகாட்டும் வகுப்புகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில். கடந்த 8ஆம் தேதி மாலை வகுப்பறைகள் மற்றும் தலைமை ஆசிரியா் அறை உள்ளிட்டவற்றை பள்ளி உதவியாளா் சரவணக்குமாா் பூட்டிச் சென்றாா். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளியில் வழிகாட்டும் வகுப்பு நடத்துவதற்காக ஆசிரியா் புவனேஸ்வரி பள்ளிக்கு வந்தாா். அப்போது, பள்ளியில் தலைமை ஆசிரியா் அறையிலிருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன.

இதுகுறித்த தகவலின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியா் புனிதா வந்து பாா்த்தபோது, அவரது அறையில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினி மற்றும் தொடா்புடைய சாதனங்கள், புரொஜெக்டா் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து அவா் பாலக்கோடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.