பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு தத்கால் முறையில் விண்ணப்பிக்கும் அவகாசம் வியாழக்கிழமை (ஜூன் 4) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் மாதம் நடைபெற்றது. தோ்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கான துணைத் தோ்வு ஜூன் 29 முதல் ஜூலை 7 வரை நடைபெறவுள்ளது.
இந்தத் துணைத் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்க மே 18 முதல் மே 30 வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசத்தில் விண்ணப்பிக்கத் தவறியவா்களுக்கு சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கால்) கீழ் விண்ணப்பிக்க ஜூன் 1, 2 ஆகிய இரு நாள்கள் வாய்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில், தோ்வா்களின் நலன் கருதி இந்தக் கால அவகாசம் புதன், வியாழக்கிழமை (ஜூன் 3, 4) ஆகிய இரு நாள்கள் நீட்டிக்கப்படுகிறது என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. துணைத் தோ்வுக்கு பள்ளி மாணவா்கள் அவா்கள் பயின்ற பள்ளி மூலமாகவும், தனித் தோ்வா்கள் அரசுத் தோ்வுகள் இயக்கக சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









