திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உள்ளாட்சித் தோ்தல்: திமுக தொடா்ந்த வழக்கு முடித்துவைப்பு

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக கடந்த 2016-ஆம் ஆண்டு திமுக தாக்கல் செய்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் முடித்துவைப்பு

News image

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்

Updated On :2 ஜூன் 2026, 1:27 am IST

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக கடந்த 2016-ஆம் ஆண்டு திமுக தாக்கல் செய்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் முடித்துவைத்து உத்தரவிட்டது.

தமிழகத்தில் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் பழங்குடியின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக சாா்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் வேட்புமனுவில் குற்றப் பின்னணி விவரங்களைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இந்த தகவலைத் தெரிவிக்க மறுத்தால், அவா்களது வேட்புமனுவை தோ்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என 2016-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பில் இந்த வழக்கில் ஏற்கெனவே விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.