ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நீட் தேர்வு: வலுக்கும் எதிர்ப்பு! தமிழகத்தில் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்....

Students massive protest in tamilnadu against NEET Exam

சென்னை லயோலா கல்லூரியில்... - X

Published On :24 ஜூலை 2026, 1:01 pm IST

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் ஜூன் 20 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கலந்துகொண்டு உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் மத்திய அமைச்சர்களின் பேச்சுவார்த்தையைத் தொடந்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

எனினும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும்வரை போராட்டம் தொடரும் என்று சிஜேபி அறிவித்துள்ளது.

சிஜேபிக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சென்னையிலும் தொடர்ந்து 3 ஆவது நாளாக மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை லயோலா கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரிகளில் மாணவர் அமைப்பின் சார்பில் மாணவர்கள் கருப்பு உடை அணிந்து நீட் தேர்வுக்கு எதிராக கோஷமிட்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதேபோல தமிழகத்தில் திருநெல்வேலி, திருப்பூர், கும்பகோணம் என பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராடிய மாணவர்களை காவல்துறை கைது செய்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததும், மாணவர்களின் போராட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Students massive protest in chennai against NEET Exam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.