ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதல்வரின் கொத்து பரோட்டா - திமுக தலைவர்களின் சால்னா! வைரலாகும் பேச்சுகள்!

தேர்தலில் திமுகவுக்கு கொத்து பரோட்டா போடப்பட்டதாக முதல்வர் விஜய்யின் விமர்சனத்துக்கு திமுக தலைவர்கள் எதிர்ப்பு குறித்து...

Duraimurugan | Vijay | Appavu

துரைமுருகன் | விஜய் | அப்பாவு - கோப்புப் படம்

Published On :10 ஜூலை 2026, 6:22 pm IST

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு கொத்து பரோட்டா போடப்பட்டதாக முதல்வர் விஜய்யின் விமர்சனத்துக்கு திமுக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கரூரில் முதல்வர் விஜய் பேசும்போது, கொளத்தூரில் 5 நிமிடங்கள் பேசியதற்கே கொத்து புரோட்டா போட்டோம். இனியும் பேசினால் என்னவாகும்? எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் விஜய்யின் விமர்சனம் குறித்து முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியிருப்பதாவது, தேர்தலுக்கு முன் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தவெக சார்பாக இந்த விஜய்தான் போட்டியிடுகிறேன் என்று கெத்தாக சொன்ன உங்களுக்கும் 127 தொகுதிகளில் மு.க. ஸ்டாலின் கொத்து புரோட்டா போட்டதை மறந்துவிட்டீர்களா? என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, முதல்வரின் விமர்சனம் குறித்து திமுக மூத்த தலைவர் துரைமுருகன் பேசியதாவது, சால்னா கடை விமர்சகர்களுக்கெல்லாம் பதில்கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

Summary

DMK leaders oppose CM Vijay's criticism

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.