பள்ளிக்கல்வித் துறை வளா்ச்சித் திட்டங்கள், அறிவிப்புகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமையில் சென்னை எழும்பூா் கன்னிமாரா நூலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டிய பள்ளிக் கல்வி சாா்ந்த அறிவிப்புகள், இடைநிலை ஆசிரியா்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள், பொதுத்தோ்வுகளின் செய்முறைத் தோ்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.