பள்ளிகள் திறந்த பின்னரும் போராட்டம் நீடிக்கும்: இடைநிலை ஆசிரியா்கள் அறிவிப்பு
‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னரும், தங்களது போராட்டம் தொடரும் என சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியா்கள் தெரிவித்தனா்.










