நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்
நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.


நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 7:31 மணிக்கு சங்குவாசபா மாவட்டத்தின் ரிதக் பகுதியில் ரிக்டர் அளவில் 4.1ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் காத்மாண்டுவிலிருந்து கிழக்கே 475 கிமீ தொலைவில் சங்குவாசபா உள்ளது.
அண்டை மாவட்டங்களான டேப்லேஜங் மற்றும் போஜ்பூரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை.
முன்னதாக ஜனவரி 11 ஆம் தேதி, லம்ஜங் மாவட்டத்தின் பன்சர் அருகே ரிக்டர் அளவில் 3.9ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. உலகின் அதிக நிலநடுக்க பாதிப்புக்குள்ளான நாடுகளில் நேபாளம் 11ஆவது இடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...