/

வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது பற்றி...

News image
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி - கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 7:50 am

இணையதளச் செய்திப் பிரிவு

தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த பிப். 16 ஆம் தேதி ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு பகுதியில் நகர்ந்து அதே பகுதியில் நிலைகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய பெருங்கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு நோக்கி நகரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.