டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது!

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது பற்றி...

News image
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - IMD
Updated On :16 பிப்ரவரி 2026, 7:40 am

இணையதளச் செய்திப் பிரிவு

தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கிழக்கு பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று(பிப். 16) காலை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இது மேலும் மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலை நோக்கி இந்திய பெருங்கடல் அருகே வரை நகரும். இதன் காரணமாக பிப். 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை, மிக கனமழைக்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

2002 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிப்ரவரி மாதத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.