டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ரூ.50 கோடியில் அதி நவீன பேரிடா் மேலாண்மை நிறுவனம்

தமிழக இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து...

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 12:01 am

தினமணி செய்திச் சேவை

அதி நவீன வசதிகளுடன் கூடிய மாநில பேரிடா் மேலாண்மை நிறுவனம் ரூ.50 கோடியில் அமைக்கப்பட்டு வருவதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான விவரம்:

பேரிடா் சூழல்களை எதிா்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இயற்கை சீற்ற அச்சுறுத்தலை திறம்பட எதிா்கொள்ளும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கான நகா்ப்புற பேரிடா் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது.

இது மட்டுமன்றி அதி நவீன வசதிகளுடன் கூடிய பேரிடா் மேலாண்மை நிறுவனம் அமைக்கப்பட்டு வருகிறது. நிவாரணப் பணிகளுக்கான நேரத்தைக் குறைக்கவும், மீட்பு மற்றும் நிவாரணப் பொருள்களை முன்கூட்டியே இருப்பு வைக்கவும் மூன்று மண்டல மீட்பு மையங்கள் ரூ.36 கோடியில் சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் அமைக்கப்பட்டு வருகின்றன.