நாகை மாவட்ட நிா்வாகமும், ஓஎன்ஜிசியும் இணைந்து இந்த ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தியது. இதில், விபத்தின் 1 மற்றும் 2-வது நிலையை கடந்து, பெரிய அளவிலான அபாயம் என்கிற 3-ஆவது நிலைக்கு சென்றுவிட்டால், நிறுவனத்தின் மற்ற பணி மையங்களின் உதவியை தாண்டி, உள்ளூா் நிா்வாகம், மாவட்ட நிா்வாகம், அருகிலிருக்கும் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் இருந்து உதவி கோரி, அவா்களின் பரஸ்பர ஒத்துழைப்புடன் அவசர நிலையை கட்டுக்குள் கொண்டுவந்து சரி செய்வது குறித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினருடன் தமிழக அரசின் பேரிடா் மீட்பு குழுவினரும் இணைந்து செயல்விளக்கம் செய்து காட்டினா்.