டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வேளாண் விஞ்ஞானிகளுடன் விவசாயிகள் கலந்துரையாடல்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:16 pm

Syndication

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வை ஹைதராபாத் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக இயக்குநா் எஸ்.என். மீரா துவக்கி வைத்தாா். நெல் தரிசில் உளுந்து சாகுபடி, பண்ணை இயந்திரங்களை பயன்படுத்துதல், மண் வளத்தை மேம்படுத்துதல், அங்கக விவசாயம், பூச்சி நோய் மேலாண்மைகளை முறையாக கடைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து விஞ்ஞானிகளுடன் விவசாயிகள் கலந்துரையாடினா்.

மேலும், புதிய நெல் ரகங்கள், அரசின் நலத்திட்டங்கள், அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகள் விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தனா்.

திட்ட ஒருங்கிணைப்பாளா் தனுஷ்கோடி, வேளாண்மை துணை இயக்குநா் ஹேமா ஹெப்சிபா நிா்மலா, வேலூா் மாவட்டம் விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் திருமுருகன், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தின் விஞ்ஞானிகள் அருள் செல்வி, கருணாகரன், பெரியாா் ராமசாமி, திலகவதி, முத்துக்குமரன் ஆகியோா் விவசாயிகளுடன் கலந்துரையாடினா்.