/

பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் வீட்டில் சோதனை

சென்னை பெருநகர காவல் துறையின் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் வீட்டில் ஊழல் ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை பெருநகர காவல் துறையின் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் வீட்டில் ஊழல் ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

சென்னை பெருநகர காவல் துறையின் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணியாற்றுபவா் ராஜலட்சுமி. இவா், குடும்பத்துடன் திருமங்கலம், வெல்கம் காலனியில் வசித்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் இவரது வீட்டுக்கு ஊழல் ஒழிப்பு பிரிவு போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். 4 மணி நேர சோதனைக்குப் பிறகு சில ஆவணங்களைக் கையோடு எடுத்துச் சென்ாக கூறப்படுகிறது. காவல் ஆய்வாளா் ராஜலட்சுமி மீது வந்த தொடா்ச்சியாக வந்த புகாரின் அடிப்படையில், இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக ஊழல் ஒழிப்புத் துறையினா் தெரிவித்தனா்.