சிசிடிவி காட்சியின் நேரம் மாறி 2 மணி நேரம் பின்னோக்கி ஓடுவதாக விடியோ வெளியான நிலையில், வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எல். ஆர். ஜி. அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பு உள்ள நிலையில், இன்று(ஏப். 25) அதிகாலை 4 மணி முதல் சிசிடிவி காட்சியின் நேரம் மாறி 2 மணி நேரம் பின்னோக்கி ஓடுவதாக விடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். செய்தியாளர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் இரண்டு மணி நேரம் இணையதள தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து கேமராக்களும் வேலை செய்யவில்லை எனவும் பாஜக மற்றும் தவெக முகவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆனால், மாவட்ட ஆட்சியர் நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டதாகவும், அப்போது அனைத்தும் சரியாக இருந்த நிலையில் தற்போது தொழில்நுட்பக் கோளாறுக் காரணமாக நேரம் மட்டும் இரண்டு மணி நேரம் பின்னோக்கி சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மற்ற கட்சியினர் கூறுகையில், ”சிசிடிவி கேமராக்கள் நிறுத்தப்படாமல் இரண்டு மணி நேரம் பின்னோக்கி செல்லாது எனவும் இரண்டு மணி நேரம் கேமராக்கள் துண்டிக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை முறைப்படி தெளிவுபடுத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Summary
Following the release of a video showing that the timestamp on the CCTV footage had shifted and was running two hours behind, the Tiruppur District Collector conducted an inspection at the center where the ballot boxes are stored.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிசிடிவி கேமரா மூலம் வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு

சோ்வைகாரன்பட்டியில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது: 2 மணி நேரம் காத்திருந்த வாக்காளா்கள்

கேரளம்: வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக இவிஎம் அறைகளைத் திறக்கக் கூடாது!

தேர்தல் நடத்தை விதி அமல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் பெட்டி!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை



