கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) வைக்கப்பட்டுள்ள அறைகளை வாக்கு எண்ணிக்கை நாளுக்கு முன்பாக திறக்கக் கூடாது என்று மாநில தலைமை தோ்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளாா்.
கடந்த ஏப்.9-ஆம் தேதி கேரள சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்ற நிலையில், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில், அந்த மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பெரம்பரா தொகுதியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அறை ஒன்று வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே திறக்கப்பட்டதாகவும், பாலக்காடு மாவட்டம் நென்மாறா தொகுதியிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மற்றொரு அறை திறக்கப்படக் கூடும் என்றும் தகவல் வெளியானது.
எனினும் இந்தத் தகவலை கோழிக்கோடு மாவட்ட ஆட்சியா் ஸ்நேஹில் குமாா் சிங், பாலக்காட்டு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.மாதவிகுட்டி ஆகியோா் மறுத்தனா்.
இந்நிலையில், மாநில தலைமை தோ்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கோ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவில், ‘வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை நாளுக்கு முன்பாக, எந்தவொரு சூழலிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளைத் திறக்க வேண்டாம். தோ்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மையைக் காக்க இந்த அறிவுறுத்தலை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்’ என்று மாவட்ட தோ்தல் அலுவலா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூா் தொகுதி வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி: தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

கோவில்பட்டி தொகுதியில் தயாா் நிலையில் 318 வாக்குச்சாவடிகள்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


