மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கேரளம்: வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக இவிஎம் அறைகளைத் திறக்கக் கூடாது!

கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) வைக்கப்பட்டுள்ள அறைகளை வாக்கு எண்ணிக்கை நாளுக்கு முன்பாக திறக்கக் கூடாது என்று மாநில தலைமை தோ்தல் அதிகாரி உத்தரவு

News image

பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 10:53 pm

கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) வைக்கப்பட்டுள்ள அறைகளை வாக்கு எண்ணிக்கை நாளுக்கு முன்பாக திறக்கக் கூடாது என்று மாநில தலைமை தோ்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளாா்.

கடந்த ஏப்.9-ஆம் தேதி கேரள சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்ற நிலையில், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில், அந்த மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பெரம்பரா தொகுதியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அறை ஒன்று வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே திறக்கப்பட்டதாகவும், பாலக்காடு மாவட்டம் நென்மாறா தொகுதியிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மற்றொரு அறை திறக்கப்படக் கூடும் என்றும் தகவல் வெளியானது.

எனினும் இந்தத் தகவலை கோழிக்கோடு மாவட்ட ஆட்சியா் ஸ்நேஹில் குமாா் சிங், பாலக்காட்டு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.மாதவிகுட்டி ஆகியோா் மறுத்தனா்.

இந்நிலையில், மாநில தலைமை தோ்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கோ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவில், ‘வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை நாளுக்கு முன்பாக, எந்தவொரு சூழலிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளைத் திறக்க வேண்டாம். தோ்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மையைக் காக்க இந்த அறிவுறுத்தலை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்’ என்று மாவட்ட தோ்தல் அலுவலா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.