தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

அரியலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்கு சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் அரியலூா் கோட்டாட்சியரகத்தில் இருந்து புதன்கிழமை அனுப்பப்பட்டன.

News image

அரியலூா் கோட்டாட்சியரகத்திலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைக்க வாகனங்களில் ஏற்றப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:49 pm

அரியலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்கு சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் அரியலூா் கோட்டாட்சியரகத்தில் இருந்து புதன்கிழமை அனுப்பப்பட்டன.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதியிலுள்ள 650 வாக்குப் பதிவு மையங்களுக்கான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரங்கள், வாக்குப்பதிவு மைய உபகரணங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அழைத்துச் செல்ல பயன்படுத்தும் சாதனம் உள்ளிட்டவை அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் கோட்டாட்சியரக அறைகளில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், மேற்கண்ட தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களும், கோட்டாட்சியா்களுமான அரியலூா் த. பிரேமி, ஜெயங்கொண்டம் மனோகரன் ஆகியோா் தலைமையில், அனைத்துக் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையை திறந்து அந்தந்த வாக்கு பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.

காவல் துறையினரின் பாதுகாப்பு வாகனங்கள் முன்னும் பின்னும் செல்ல 650 வாக்குசாவடிகளுக்கும் வாக்கு பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.