திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு முடிந்தது.

News image

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது! - படம்: டிஎன்எஸ்

Updated On :23 ஏப்ரல் 2026, 12:31 pm

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு முடிந்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிகளில், கடும் வெய்யிலையும் பாராமல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர்.

மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றாலும், 6 மணிக்குள் வரும் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 5.73 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். இதில், 14 லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்கள்; 3.98 லட்சம் பேர் 85 வயதைக் கடந்தவர்கள்.

மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 82.24 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

Summary

Voting has concluded in Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.