மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

போதமலைக்கு முதல்முறையாக சாலைவழிச் சென்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

போதமலைக்கு முதல்முறையாக சாலைவழிச் சென்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக...

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் - கோப்புப்படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 10:10 am

நாமக்கல்: ராசிபுரம் தொகுதி போதமலையில் உள்ள மூன்று மலைக் கிராமங்களுக்கு முதல் முறையாக சாலை வழித்தடத்தில் வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்டது போதமலை. இந்த மலையில் கீழுர், மேலூர், கெடமலை ஆகிய குக்கிராமங்கள் உள்ளன.

இந்த மலைக் கிராமத்துக்குச் செல்ல சாலை வசதி இல்லாமல் இருந்தது. சுமாா் 7 கி.மீ. தொலைவு ஒற்றையடிப் பாதையில் நடந்துசெல்ல வேண்டும்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலின்போது, போதமலைக்கு ஒற்றையடிப் பாதையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்டன.

நாடு சுதந்திரம் பெற்றது முதலே தலைச் சுமையாகவே வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தன.

இதனிடையே, போதமலை வாழ் மக்களுக்கு ரூ. 140 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடக்கப்பட்டு, முதல்கட்டமாக மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போதமலை கிராமத்துக்கு முதல்முறையாக சாலை வழித்தடத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

Summary

For the first time, Electronic Voting Machines were transported by vehicles via a road route to three hill villages located in Bodamalai, within the Rasipuram constituency.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.