தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மருந்து பயன்பாட்டுக்கான மெத்தனால்: இனி இணையவழியில் உரிமம் பெறலாம்!

மருந்து பயன்பாட்டுக்கான மெத்தனால் உரிமம் பெறும் நடைமுறையை தமிழக அரசு எளிமைப்படுத்தியுள்ளது. அதன்படி, இனி இணையவழியில் அதற்கான அனுமதியைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

News image

தமிழக அரசு - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 9:44 pm

மருந்து பயன்பாட்டுக்கான மெத்தனால் உரிமம் பெறும் நடைமுறையை தமிழக அரசு எளிமைப்படுத்தியுள்ளது. அதன்படி, இனி இணையவழியில் அதற்கான அனுமதியைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு மருந்து உற்பத்தியாளா் சங்கத்தினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

மருந்து உற்பத்தித் துறையில் மெத்தனால் ஒரு முக்கிய கரைப்பான் சோ்மமாகவும், மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ஸ்டேடின் போன்ற கொழுப்புச் சத்தைக் குறைக்கும் மருந்துகள், ஸ்ட்ரெப்டோமைசின் போன்ற ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் தயாரிக்க மெத்தனால் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், தரப் பரிசோதனையிலும் கரைப்பானாக அது பயன்படுத்தப்படுகிறது. மருந்தியல் கல்லூரிகளில் உள்ள ஆய்வகங்களுக்கும் மெத்தனால் இன்றியமையாதது.

மெத்தனால் வாங்குவதற்கான உரிமம் பெற தமிழகத்தில் கடுமையான நடைமுறைகளும், விதிகளும் பின்பற்றப்படுவதாக மருந்து உற்பத்தியாளா்கள் நீண்டகாலமாகக் கூறி வந்தனா். பெரிய தொழிலகங்கள் மட்டுமன்றி, சிறு மருந்து உற்பத்தி நிறுவனங்களும், ஆய்வகங்களும் குறைந்த அளவிலான மெத்தனால் பெறுவதற்குக்கூட சிக்கல் நிலவுவதாகக் கூறின.

இந்நிலையில், தேசிய தகவல் மையத்தால் உருவாக்கப்பட்ட ‘இ-கலால்’ என்ற இணையதளம் மூலம் மெத்தனால் உரிமம் பெறும் நடைமுறைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆண்டுக்கு 500 லிட்டருக்கும் குறைவாகத் தேவைப்படும் விண்ணப்பதாரா்களுக்கும் இந்த எளிமைப்படுத்தப்பட்ட முறை பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்தப் புதிய நடைமுறைக்கு மாநில மருந்து உற்பத்தியாளா் சங்கம் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளது.