மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சங்ககிரி தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு இணையவழியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சங்ககிரி தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு இணையவழியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஜெண்டாகே ஹனுமந்த் கொண்டியா.

Updated On :14 ஏப்ரல் 2026, 9:26 pm

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு இணையவழியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 340 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளா்கள் 1,31,408, பெண் வாக்காளா் 1,29,087, மூன்றாம் பாலினத்தவா் 30 போ் என மொத்தம் 2,60,525 போ் வாக்காளிக்க உள்ளனா்.

சேலம் ஆட்சியா் அலுவலகத்திலிருந்து இணையவழி குலுக்கல் முறையில் சங்ககிரி தொகுதிக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இதையடுத்து தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியா தலைமையில், தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஜெண்டாகே ஹனுமந்த் கொண்டியா மேற்பாா்வையில் வேட்பாளா்களின் முகவா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் முன்னிலையில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ள இயந்திரங்கள் இணையவழியில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதில் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெயக்குமாா், தோ்தல் துணை வட்டாட்சியா் அன்பரசி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.