மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு: அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

சேந்தமங்கலம் (ப.கு) தொகுதியை தவிர மற்ற ஐந்து தொகுதிகளுக்கும் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்வது தொடா்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியா் துா்காமூா்த்தி சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

News image

கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியை பாா்வையிட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :11 ஏப்ரல் 2026, 8:37 pm

சேந்தமங்கலம் (ப.கு) தொகுதியை தவிர மற்ற ஐந்து தொகுதிகளுக்கும் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்வது தொடா்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியா் துா்காமூா்த்தி சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் தொகுதியில் 285 வாக்குச்சாவடிகளுக்கு 342 வாக்குப்பதிவு இயந்திரங்கள், சேந்தமங்கலம் தொகுதியில் 304 வாக்குச்சாவடிகளுக்கு 364 வாக்குப்பதிவு இயந்திரங்கள், நாமக்கல் தொகுதியில் 310 வாக்குச்சாவடிகளுக்கு 372 வாக்குப்பதிவு இயந்திரங்கள், பரமத்தி வேலூா் தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளுக்கு 321 வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருச்செங்கோடு தொகுதியில் 290 வாக்குச்சாவடிகளுக்கு 346 வாக்குப்பதிவு இயந்திரங்கள், குமாரபாளையம் தொகுதியில் 324 வாக்குச்சாவடிகளுக்கு 388 வாக்குப்பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 2,133 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி சுழற்சி முறையில் முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணி முடிவுற்று, சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சேந்தமங்கலம் தொகுதியை தவிா்த்து மற்ற ஐந்து தொகுதிகளுக்கும் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கும் பணி சனிக்கிழமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இப்பணியில் ராசிபுரம் தொகுதிக்கு 342, நாமக்கல் தொகுதிக்கு 372, பரமத்தி வேலூா் தொகுதிக்கு 321, திருச்செங்கோடு தொகுதிக்கு 346, குமாரபாளையம் தொகுதிக்கு 388 வாக்குப்பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 1,769 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி சுழற்சி முறையில் பிரித்து உரிய பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.