திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெண்களுக்குத் தொகுதியை விட்டுக்கொடுக்க மோடியும் அமித் ஷாவும் தயாரா? மாணிக்கம் தாகூர் சவால்

பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் தொகுதிகளை பெண்களுக்கு விட்டுக்கொடுக்கத் தயாரா என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் சவால்

News image

மோடி | மாணிக்கம் தாகூர் | அமித் ஷா - சித்திரிப்பு

Updated On :19 ஏப்ரல் 2026, 3:54 pm IST

பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் அவர்களின் தொகுதிகளை பெண்களுக்கு விட்டுக்கொடுக்கத் தயாரா என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் சவால் விடுத்துள்ளார்.

விருதுநகர் எம்.பி.யான காங்கிரஸை சேர்ந்த மாணிக்கம் தாகூர், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "2023 மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தில் உறுதியளித்தபடி, அனைத்து 543 தொகுதிகளிலும் 33 சதவிகித இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுமாயின், எனது விருதுநகர் தொகுதியை விட்டுக்கொடுக்க நான் தயார்.

ஆனால், மோடியும் அமித் ஷாவும் வாரணாசியையும் காந்திநகரையும் விட்டுக்கொடுக்க ஏன் தயாராக இல்லை? இந்தத் தயக்கத்துக்கு என்ன காரணம்?

இதனை விடுத்து, மாறாக புதிய தொகுதிகளை உருவாக்குவது பற்றி பேசுகின்றனர்.

உண்மையில், அவர்கள் சமூக மாற்றத்தைத் தவிர்ப்பது தெளிவாகத் தெரிகிறது. மகளிர் இடஒதுக்கீடு என்பது பாரபட்சமானதாக இருக்க முடியாது.

அது நியாயமானதாகவும், உடனடியானதாகவும், தற்போதுள்ள தொகுதிகள் முழுவதிலும் செயல்படுத்தப்பட வேண்டும்.

தொகுதி மறுவரையினாலோ திசைதிருப்பும் தந்திரங்களாலோ தாமதப்படுத்துதல் கூடாது. இந்தப் போராட்டம் எளிதானதே. இது உண்மையான பிரதிநிதித்துவமா? அல்லது அரசியலுக்கானதா?" என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்களவையில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள், எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடிக்கும் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் சவால் விடுத்துள்ளார்.

Summary

Congress MP Manickam Tagore offers to give up seat, questions PM Modi - Amit Shah on Women's Quota bill

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.