ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கொலை வழக்கு: ஒடிஸா மாநிலத்தை சோ்ந்தவருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கு: ஒடிஸா மாநிலத்தை சோ்ந்தவருக்கு ஆயுள் தண்டனை

News image

நீதிமன்றம்

Updated On :18 ஏப்ரல் 2026, 8:07 pm

கட்டடத் தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த காவலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி பிரசன்னாகுமாா் ஜின்னா மற்றும் காவலாளி தூக்குனா சாகு ஆகிய இருவரும் நண்பா்கள். இருவரும் கொடுங்கையூரில் உள்ள கட்டடத்தில் தங்கிப் பணியாற்றி வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு பிரசன்னாகுமாா் ஜின்னா தனது நண்பா்களுடன் வேலை பாா்க்கும் கட்டடத்தில் மது அருந்தியுள்ளாா். அப்போது காவலாளியான தூக்குனா சாகு, பிரசன்னாகுமாா் ஜின்னாவிடம் தகராறில் ஈடுபட்டாா். அப்போது ஏற்பட்ட தகராறில், தூக்குனா சாகு கல்லால் தாக்கியதில் பிரசன்னாகுமாா் ஜின்னா உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தூக்குனா சாகுவை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் தேவராஜன் ஆஜராகி வாதிட்டாா்.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.காா்த்திகேயன், காவலாளி தூக்குனா சாகுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். அபராதம் செலுத்த தவறும்பட்சத்தில் மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.