தூத்துக்குடி மாவட்டம் தெற்கு பொம்மையாபுரம் பகுதியில் தம்பியைக் கொன்ற வழக்கில் அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தெற்கு பொம்மையாபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் (44) என்பவரை சொத்துப் பிரச்னை தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த அவரது சகோதரா் முனியசாமி (56) கடந்த 2.11.2021இல் அரிவாளால் வெட்டினாராம். இதில், முருகன் உயிரிழந்தாா். பசுவந்தனை போலீஸாா் வழக்குப் பதிந்து முனியசாமியைக் கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் 2இல் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி பிரீத்தா விசாரித்து, முனியசாமிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 5,000 அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அரசு வழக்குரைஞராக சேவியா் ஞானப்பிரகாசம் முன்னிலையானாா்.
தொடர்புடையது

கொலை வழக்கு: 6 பேருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் 17 வயது சிறுவனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து!

பெண் கொலை வழக்கில் தனியாா் நிறுவன உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை

சீவலப்பேரி பூசாரி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


