வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தொழிலாளி கொலை வழக்கு: கடலூா் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

திருச்சியில் தொழிலாளி கொலை வழக்கில் கடலூா் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

சிறை - சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 6:31 pm

திருச்சியில் தொழிலாளி கொலை வழக்கில் கடலூா் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், வேப்பூா் பகுதியைச் சோ்ந்த எஸ். வடிவேல் (25), எடசந்தூரைச் சோ்ந்த எஸ். சரத்குமாா் (30), கடலூரைச் சோ்ந்த ஜெயசூா்யா (21), கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த ஐயப்பன் (27) மற்றும் திருமால் (37) ஆகிய 5 பேரும் கடந்த 2023-ஆம் ஆண்டு திருச்சி காவிரி பாலத்தில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, காவிரி பாலத்தின்கீழ் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகையில் 5 பேரும் தங்கியிருந்தனா். இவா்களுடன் திருச்சி கீழசிந்தாமணியைச் சோ்ந்த சக்திவேல் (37) என்பவரும் தங்கியிருந்துள்ளாா்.

இந்நிலையில், 2023, மே 27-ஆம் தேதி வடிவேலின் கைப்பேசி மற்றும் ரூ.1,000 பணம் காணாமல்போனது. இதை சக்திவேல்தான் திருடினாா் என்று நினைத்து, அவரை வடிவேல் உள்ளிட்ட 5 பேரும் இரும்புக் கம்பி, மரக்கட்டையால் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த சக்திவேல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து வடிவேல் உள்பட 5 பேரையும் கைது செய்தனா். இந்த வழக்கு திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி கோபிநாதன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில், முக்கிய குற்றவாளியான வடிவேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், சரத்குமாருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா். மற்ற மூவரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் அரசு கூடுதல் வழக்குரைஞா் பாலசுப்பிரமணியன் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.