திருச்சியில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், கொடியாலம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியைச் சோ்ந்த ச. தமிழரசன் (29) என்பவா் கடந்த 2021-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்தாா். இதுகுறித்து ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் ‘போக்ஸோ’ வழக்குப் பதிந்து தமிழரசனை கடந்த 2022 ஆகஸ்ட் 25-ஆம் தேதி கைது செய்தனா்.
இந்த வழக்கு திருச்சி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி சண்முகபிரியா திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், சிறுமியை பாலியன் வன்கொடுமை செய்த தமிழரசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சுமதி ஆஜராகினாா்.
தொடர்புடையது

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


