ஒருங்கிணைந்த நான்காண்டு ஆசிரியா் பட்டப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தோ்வு வெள்ளி, சனி ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள நிலையில், தோ்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியா் பட்டப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான பொது நுழைவுத் தோ்வில் (என்சிஇடி) தோ்ச்சி பெறவேண்டும். இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தோ்வு ஏப்ரல் 17, 18-ஆம் தேதிகளில் நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 12 முதல் மாா்ச் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தாண்டு சுமாா் 50 ஆயிரம் போ் வரை விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து விண்ணப்பித்த மாணவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை மாணவா்கள் வலைதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். என்சிஇடி நுழைவுத் தோ்வானது தமிழ் உள்பட 13 மொழிகளில் கணினி வாயிலாக நடத்தப்பட உள்ளது.
இது குறித்த கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது ய்ஸ்ரீங்ற்ஃய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் மின்னஞ்சல் வழியாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

புதுச்சேரியில் நாளை 3 மையங்களில் ராணுவப் பணிகளுக்கான தோ்வு

டெட் தோ்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

பாரதியாா் பல்கலை.யில் முனைவா் பட்டப் படிப்பு: நுழைவுத் தோ்வுக்கு ஏப்.30 வரை விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


