ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி., பி.எட். மற்றும் பி.ஏ., பி.எட். படிப்புகள் 2026- 27 கல்வியாண்டு முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் மாணவர்கள் சேர்க்கை மேற்கொண்டால் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எந்த விதத்திலும் பொறுப்பாகாது என்றும் எந்தவொரு கல்வி நிறுவனமும் இந்த படிப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை செய்ய அனுமதிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் கடந்த 12.09.2025 அன்று இதுபற்றிய பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேசிய ஆசிரியர் கல்வி மன்றம் - திருத்த ஒழுங்குமுறை விதிகள் 2014 -ன்படி 25.01.2024 படியும், 03.07.2025 நாளிட்ட அரசு இதழ் அறிவிப்பின் மூலம் மேலும் திருத்தப்பட்டபடியும், ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி., பி.எட். மற்றும் பி.ஏ., பி.எட். (B.Sc., B.Ed & B.A., B.Ed) பட்டப்படிப்புகள் 2026 - 2027ஆம் கல்வியாண்டிலிருந்து நிறுத்தப்பட்டதாகவும் மேலும் ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி., பி.எட். மற்றும் பி.ஏ., பி.எட். பட்டப்படிப்புகள் நடத்தும் எந்தவொரு கல்வி நிறுவனமும் புதிய மாணவர் சேர்க்கை செய்ய அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் 12.09.2025 அன்று பொது அறிவிப்பின் படி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்று இயங்கும் கல்வியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி.. பி.எட் மற்றும் பி.ஏ.,பி.எட் (B.Sc.B.Ed & B.A.B.Ed) பட்டப்படிப்புகளில் 2026 - 2027 ஆம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை செய்ய வழிவகை இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விதிகளை மீறி மாணவர் சேர்க்கை செய்தால் இப்பல்கலைக்கழகம் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது எனத் தெரிவிக்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
Integrated 4 Year B.Ed. Courses stopped from this education year
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடுத்து என்ன? பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை விவரம் அறிய செல்லும் முன் செய்ய வேண்டியது!

தமிழ்ப் புத்தாண்டுக்கான பொதுப்பலன்கள் - 2026

வரவேற்பில்லாத இளநிலை பட்டப்படிப்புகள் நிறுத்தப்படலாம்! புதிய படிப்புகள்?

பி.எட். முடித்தோருக்கு சான்றிதழ் விநியோகம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


