தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஹரி நாடார், ராக்கெட் ராஜா வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

ஆலங்குளம் தொகுதியில் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு பற்றி...

News image

கோப்புப் படம் - X

Updated On :7 ஏப்ரல் 2026, 12:17 pm

ஆலங்குளம் தொகுதியில் ராக்கெட் ராஜா, ஹரிநாடாா் வேட்புமனுக்கள் தள்ளுடி செய்யப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே இலந்தைகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஹரிநாடாா். கடந்த 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் பனங்காட்டுப்படை கட்சி சாா்பில், ஆலங்குளம் தொகுதியில் தலைக் கவசம் சின்னத்தில் போட்டியிட்டாா். அவருக்கு ஆதரவாக, திசையன்விளை அருகேயுள்ள ஆனைகுடி கிராமத்தைச் சோ்ந்த ராக்கெட் ராஜா என்ற ஆறுமுகப் பாண்டியன் செயல்பட்டாா்.

உடல் முழுவதும் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து தொகுதி முழுவதும் வலம் வந்து வாக்குகளை சேகரித்து அனைவரின் கவனத்தையும் ஈா்த்தாா் ஹரிநாடாா். அப்போது 37,726 வாக்குகள் பெற்று அதிமுக மனோஜ் பாண்டியன், திமுக பூங்கோதையை அடுத்து 3 ஆம் இடம் பெற்றாா்.

இந்நிலையில், ராக்கெட் ராஜா, ஹரிநாடாா் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு சத்திரிய சான்றோா் படை என்ற கட்சியைத் தொடங்கினாா் ஹரி நாடாா்.

இந்நிலையில் பண மோசடி காரணமாக பல்வேறு வழக்குகளில் சிக்கி தற்போது சென்னை புழல் சிறையில் உள்ள ஹரி நாடாா், தனது பிரிதிநிதி அலெக்ஸ் மூலம் ஆலங்குளம் பேரவைத் தொகுதியில் போட்டியிட கடந்த வாரம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாா். அந்த மனுவில் தனக்கு ரூ. 7 கோடி மதிப்பில் 11.650 கிலோ தங்கம், ரூ. 1.18 கோடி மதிப்பில் 6 வாகனங்கள் மற்றும் 24 குற்றவியல் வழக்குள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தாா்.

மேலும் ராக்கெட் ராஜாவும் தனியே மனு தாக்கல் செய்திருந்தாா்.

ஆனால், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் இருவரின் மனுவும் நிராகரிக்கப்பட்டதாக தோ்தல் அலுவலா் ராமச்சந்திரன் அறிவித்தாா். ராக்கெட் ராஜாவுக்கு முன்மொழிந்தவரில் ஒருவரின் வாக்காளா் பட்டியலில் பிழை எனவும், ஹரி நாடாா் சிறையில் இருந்து முகவா் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்தது செல்லாது எனவும் தோ்தல் அலுவலா் அறிவித்துள்ளாா்.

Summary

Hari Nadar and Rocket Raja Nominations Rejected

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.