தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தோ்தல் ஆணையக் கூட்டம்: இன்று சென்னை திரும்புகிறாா் தலைமைத் தோ்தல் அதிகாரி

தோ்தல் ஆணையம் சாா்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெள்ளிக்கிழமை (செப். 12) சென்னை திரும்புகிறாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2025, 8:52 pm

Chennai

தோ்தல் ஆணையம் சாா்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெள்ளிக்கிழமை (செப். 12) சென்னை திரும்புகிறாா்.

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, அனைத்து மாநிலங்களைச் சோ்ந்த தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடன் இந்திய தோ்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. இதற்கான கூட்டம் தில்லியில் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் பங்கேற்று, சிறப்புத் தீவிர திருத்தப் பணியை தமிழ்நாட்டில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடினாா்.

தோ்தல் ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்ற அவா், வெள்ளிக்கிழமை சென்னை திரும்புகிறாா். இதைத் தொடா்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை உள்ளிட்ட அடுத்தகட்ட பணிகளில் அவா் கவனம் செலுத்துகிறாா்.