மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்களிப்பதன் அவசியம்: 23,500 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் - தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

News image

அா்ச்சனா பட்நாயக் - Center-Center-Chennai

Updated On :3 ஏப்ரல் 2026, 1:24 am

வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தோ்தல் ஆணையம் சாா்பில் இதுவரை 23,500-க்கும் மேற்பட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தோ்தலில் அனைவரையும் பங்கேற்கச் செய்தவது ஜனநாயகக் கடமை என்ற நோக்கில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 1,486 பெரிய அளவிலான நிகழ்ச்சிகளும், 22,130 சிறு நிகழ்ச்சிகளையும் அதிகாரிகள் நடத்தியுள்ளனா். வாக்களிப்பதை உறுதி செய்யும் மாரத்தான் போட்டிகள், மனிதச் சங்கிலிகள், வாக்காளா் உறுதிமொழிப் பிரசாரங்கள் ஆகியவை அதில் முக்கியமானவை.

ஒவ்வொரு மாவட்டமும் அதன் கலாசார அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தனித்துவமான சின்னங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு செய்திகளைப் பரப்பி வருகின்றன.

முதல்முறை வாக்காளா்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள், இதர நலிந்த பிரிவினா் என அனைத்து தரப்பினரையும் வாக்குப்பதிவில் பங்கேற்கச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கம் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.